Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பட்டதாரிப் பெண்… எடுத்த விபரீத முடிவு… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

பட்டதாரி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வெட்டரபட்டி கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிதா என்ற மகள் உள்ளார். இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர். இந்நிலையில் தனது தாத்தா அழகரசன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய தாத்தா வீட்டில் உள்ள ஒரு அறையில் ஹரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து ஹரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |