Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி பெறாமல் அமைத்த வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் மலை அடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் தனது வயலை சுற்றி அரசு அனுமதியின்றி மின் வேலியை அமைத்துள்ளார். இந்நிலையில் கணேசனின் வயலுக்கு அருகில் இருக்கும் மற்றொரு வயலில் தங்கமலை என்ற கூலி தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் வயலை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் தங்கமலையின் கால் பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தங்கமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |