Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த கார்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. சென்னையில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனை ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாராயணன் தனது காரில் மாமல்லபுரம் நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து கூத்தவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையில் தாறுமாறாக ஓடி ரிச்சர்டு என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனை அடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் நாராயணனை உடனடியாக மீட்டனர். அதன்பிறகு நாராயணன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் பற்றி  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |