Categories
தேசிய செய்திகள்

தத்தெடுத்து வளர்த்த மகளுக்கு….”இந்து முறைபடி திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தந்தை”…. நெகிழ வைத்த சம்பவம்….!!!

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தான் தத்தெடுத்து வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியை சேர்ந்த பெண் பூஜா. கடந்த 10 ஆண்டிற்கு முன்பாக பூஜாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் யாரும் அவரை எடுத்து வளர்ப்பதற்கு முன்வரவில்லை. இதனால் அவர் வீட்டின் அருகில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மஹபூப் மஸ்லி என்ற இஸ்லாமியர் அந்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பூஜாவை வளர்ந்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயது தாண்டிய போது திருமணம் செய்து வைக்க எண்ணிய இஸ்லாமிய தந்தை அந்த சிறுமியின் இந்து மதத்தின் படியே மாப்பிள்ளை பார்த்து அந்த முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நான் பூஜாவிற்கு அவரது மதத்தை சேர்ந்தவரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினேன். மேலும் பத்து ஆண்டுகளாக நான் அவரை வளர்த்த போதும், ஒரு முறை கூட இஸ்லாமிய மதத்தை பின்பற்றும்படி நான் கூறவில்லை. அது என் மதத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். தற்போது எனக்கு மன நிறைவாக உள்ளது. அவரது பெற்றோர்கள் நிச்சயம் அவருக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள்” என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Categories

Tech |