கணவன் மனைவி இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு வனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அடிக்கடி சண்டை வந்ததால் வனிதா கூடலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துசெல்வம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்பின் முத்துசெல்வம் வீட்டிற்கு வந்த அவரது தாயிடம் விஷம் குடித்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முத்துசெல்வத்தை மீட்டு கம்பம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துசெல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற லோயர்கேம்ப் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முத்துசெல்வத்தின் உடலை உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.