தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் ஜூஸ் – 1/2 கப்
கற்றாழை ஜூஸ் – 1/4 கப்
தேங்காய் எண்ணெய் – 1 கப்
செய்முறை :
தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .