Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. 2 நாட்கள் இந்த சேவை கிடையாது…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இன்டர்நெட் பேங்கிங் சேவை முடங்கவிருக்கிறது. மெயின்டனன்ஸ் பணிக்காக இந்த நாட்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை ஒரு மணிவரை இன்டர்நெட் பேங்கிங் சேவை தடைபடும் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் யோனோ, யோனோ லைட்,யோனோ பிசினஸ் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் இரண்டு நாட்கள் பெற முடியாது. அதனால் முன்கூட்டியே அல்லது ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள லாம் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மெயின்டனன்ஸ் பணிகள் நடை பெற்றாலும் அந்த சமயத்தில் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பேங்கிங் தகவல் பாதுகாப்பானதாக இருக்கும். அதனைப்போலவே எஸ்பிஐ யோனோ அப் உள்ளிட்ட மொபைல் ஆப்களையும் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்து பயன்படுத்தும்படி வங்கி கூறியுள்ளது.

Categories

Tech |