டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ஜார் உகுயேவ் உடன் மோதிய அவர் கடுமையாக போராடிய நிலையில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் ஐந்தாவது பதக்கமும் இரண்டாவது வெள்ளிப்பதக்கமும் ஆகும். அரியானா மாநில அரசு இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அவருக்கு நான்கு கோடி பரிசு அறிவித்துள்ளது.
Categories
BREAKING: டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம்….!!!!
