நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை இந்த இணையத்தின் மூலம் பதிவு செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.