Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்ற பிறகும் சரி ஆகல… அவதிப்பட்டு வந்த முதியவர்… இறுதியாக எடுத்த வீபரித முடிவு…!!

தேனி மாவட்டத்தில் உடல் நல குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள சின்னராமகவுண்டன்பட்டியில் பெருமாள்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பின்பும் அடிக்கடி உடல் நலம் பாதிப்படைந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெருமாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் அபகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் வைத்து முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் மயங்கி கிடந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சின்னமனூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |