கடலின் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவு, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, இந்தியா, இந்தோனேசியா, பிஜி உள்ளிட்ட கடல் பகுதிகள் கவின்மிகு பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகளாக திகழ்கிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண கடல் பகுதியில் உலகிலேயே மிக நீளமான பவள பாறை உள்ளது. “கிரேட் பேரியர் பவளப்பாறை” என்றழைக்கப்படும் இந்த பவளப்பாறை சுமார் 2,300 கிலோ மீட்டர் வரை பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் பவளப்பாறை நிறைந்த பகுதியாக திகழ்கிறது.
இந்த பகுதிகளில் கடலின் வெப்ப நிலை பவளப்பாறைகள் அழிந்து வருவதால் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 50 சதவீத பவளப்பாறைகள் 1970-ஆம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது குறைந்து விட்டதாகவும், கடல் மாசு மற்றும் கார்பன் வெளியீட்டால் ஏற்படும் கடலின் வெப்பம் அதிகரித்தல் ஆகியவற்றை குறைத்தால் பவளப்பாறைகளை அழியாமல் பாதுகாக்க முடியும்.
அப்படி இல்லை என்றால் கடலில் பவளப்பாறைகள் என்பது 2,100-ஆம் ஆண்டுகளில் இல்லாமலேயே போய்விடும் என்று ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் பவளப்பாறைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.