நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் மராட்டியத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வணிக வளாகங்கள் இன்று முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.