Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைக்கு அஸ்வகந்தா…. ஆய்வு தொடக்கம்….!!!!!

.உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, ஆயுர்வேத சிகிச்சை முறையில், அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன.கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும், சில இடங்களில் அஸ்வகந்தா மருந்து அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரிட்டனின் லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் என பல பகுதிகளில் 2,000 பேரிடம் இந்த பரிசோதனை விரைவில் துவங்க உள்ளது.

Categories

Tech |