நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங் குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரப்பட்டியை சேர்ந்த கொளதமன் என்பரின் படகில் 10 மீனவர்கள் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதி அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இலங்கை கடற்படையினரின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்த மீனவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்லை தாண்டி வந்ததால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.