Categories
தேசிய செய்திகள்

வெண்கலப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு…. பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பிவி சிந்து இந்தியாவின் பெருமைக்குரியவர். நாட்டின் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்துக்கு எனது வாழ்த்துக்கள் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |