நாம் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு சிறந்த வழி தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் பெரும் தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற்றுக்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டு கணக்கில் 3 பேர் வரை இணைந்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தற்போது தபால் அலுவலக மாத வருமான திட்டத்திற்கு 6.6% வட்டி கிடைக்கின்றது. இந்தத் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 33 ரூபாய் பென்ஷன் பெற முடியும். மொத்தம் ஐந்து ஆண்டுகளில் வட்டியாக 16 ,500 ரூபாய் கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 550 ரூபாய் பென்ஷன் பெறலாம். அதன்படி ஆண்டுக்கு 6600 ரூபாய் அல்லது ஐந்து ஆண்டுகளில் 33 ஆயிரம் பெற முடியும். இந்தத் திட்டத்தில் 4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,475 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 29,700 ரூபாய் பென்ஷன் பெற முடியும்.