பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் தினேஷின் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பா.ரஞ்சித் மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
மேலும் பா.ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் தினேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தினேஷின் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை பா.ரஞ்சித் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.