Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…சாலை ஓரம் வாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை… வைரல் வீடியோ…!!!

ஆட்டோ  ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த கடைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே, சாலையோரமாக நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

கீழே விழுந்து படுகாயமடைந்த நீதிபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த இந்த நீதிபதி அந்த கும்பலை சேர்ந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது தலைமை நீதிபதி என் வி ரமணா நீதிபதி கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் குமார் வர்மா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆட்டோவை திருடிச் சென்ற இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |