Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரி பார்ப்பதற்காக அனுப்பி வைத்ததால்…. கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடு…. வேலூரில் பரபரப்பு….!!

பள்ளி ஆசிரியரின் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் மாறுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காவனூர் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மேரி தைரிய நெஞ்சினி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சான்றிதழ் தேர்வுத்துறைக்கு சரிபார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் உள்ள மதிப்பெண்களும், 10 – ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ள மதிப்பெண்களும் மாறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி சி.எஸ்.ஐ. பள்ளி தாளாளருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ் கூறும்போது, அவர்கள் போலி சான்றிதழ்கள் வைத்து வேலைக்கு சேர்ந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |