கர்நாடக மாநிலத்தில் 46 குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் ஒரு கோணிப்பையில் குரங்குகளை கொலை செய்து அதனை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த அனைத்து குரங்குகளையும் மீட்டனர். அதில் மயக்க நிலையில் இருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமிருந்த 46 குரங்குகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினை யார் செய்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன.