Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையும் கொண்டு போறாங்களே… இரவோடு இரவாக செய்த செயல்… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தோட்டத்தில் தண்ணீர் பாசனம் மற்றும் மின்சாரத்திற்கு தேவையான மின் வயர்கள் இருந்துள்ளது.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவோடு இரவாக தனபாலனின் தோட்டத்தில் இருந்த மின் வயர்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மின்வயர்கள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்து தனபாலன் உடனடியாக மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |