Categories
மாநில செய்திகள்

2 மாதத்தில் எப்படி செய்ய முடியும்…? மா சுப்பிரமணியன் கேள்வி…!!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் செய்யாததை இரண்டு மாதத்தில் செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் சரியா இருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அடுத்த மாதம் கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக 1000 செவிலியர்களின் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |