கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே உணவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும்,கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்களுக்கு பெரும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் இத்தாலி உணவுகளின் ருசியை பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது மாஸ்க் அணிய முடியாது ஆனால் காத்திருக்கும் போது மட்டும் மாஸ்க் அணிவதால் என்ன பயன் என்று கூறி உணவகத்தில் மாஸ்க் அணிய அவசியம் இல்லை என்ற விளம்பரத்தை அறிவித்தது. இதனால் இந்த உணவகத்தின் உரிமம் பறிபோகும் என்று கலிபோர்னியா நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்த உணவகம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மட்டுமே உணவகத்தில் அனுமதி என்ற புது விளம்பரத்தை வெளியிட்டது. இதனால் உணவகத்திற்கு 152,060 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.