Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறி கீழே விழுந்ததால்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விக்டோரியா தனது சகோதரரான மாணிக்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தருவை-திடியூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வேகத்தடையில் மீது மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விக்டோரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்டோரியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |