சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சோபியா என்ற மாணவி “எனது பூமி” என்ற தலைப்பின் கீழ் 148 அடி நீளத்திலான காகிதத் தாளில் 540 ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் ஓவியத்திற்காக அருங்காட்சிய அலுவலரான குணசேகரன் முன்னிலையில் “ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” அமைப்பினர் அங்கீகாரம் செய்து மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டியுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியரான அன்பு செல்வன் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.