சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
இதனால் போலீசார் இருமுறை சுட்டதில் ரவுடி மணி உயிரிழந்தார். ரவுடிகள் பூபாலன் – மணிகண்டன் இடையேயான மோதலில் இதுவரை 21 கொலைகள் நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி மணியின் உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த எஸ்.ஐ பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.