Categories
தேசிய செய்திகள்

விரைவில் குறைந்த விலையில் இ-பைக்… ரிவோல்ட் வாகனத்தின் புதிய மாடல்…. வெளியான தகவல்…!!!

மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும்.

ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மின்சார வாகனத்தின் மீது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அரசும் இது போன்ற சலுகைகளை வழங்கி வருவதால் மின்சார வாகனத்தின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மின்சார வாகன நிறுவனமான ரிவோல்ட், அடுத்த ஆண்டு முதல் குறைந்த விலையில் புதிய பைக் மாடல்களை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது. தற்போது விற்பனையில் உள்ள RV300 மாடல் பைக்கின் விலை 95,000 ஆகும். 2022-ல் RV300 பைக் உற்பத்தி நிறுத்தப்பட்டு, RV1 என்ற புதிய மாடல் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் மீது மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் இதன் விலையை குறைக்க உள்ளதா அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |