Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களை அவதூறா பேசிட்டாங்க…. கட்சியினரின் போராட்டம்…. தென்காசியில் பரபரப்பு….!!

பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் நகர பா.ஜனதா தலைவர் வேம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் போன்றோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்தினர்.

மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமராஜா, துணைத்தலைவர் பாலகுருநாதன்,  தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |