Categories
மாநில செய்திகள்

லாட்டரி விற்பன: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்கப்போகிறது என்று பரவும் தகவல் இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் லாட்டரியை கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாட்டரி சீட்டை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டாம். தமிழகத்தின் ஏழை எளிய மக்களை காப்பாற்ற ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்தால் தமிழக மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |