இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவை பாம்பனில் ரயில் மற்றும் சாலை பாலங்கள் இணைத்து வருகின்றது. இதில் ரயில் பாலம் ஒன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளதால் பாம்பன் கடலில் மீண்டும் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில்பாதை பணிக்காக நேற்று கேரளாவில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு இரும்பு மிதவை வந்தது. இன்று மதியம் 02.30 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது அந்த மிதவை பாம்பன் ரயில் பாலத்தின் தூணில் மோதி சேதப்படுத்தியது. பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள பழுது காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.