Categories
தேசிய செய்திகள்

FlashNews: 2 நாட்கள் முழு ஊரடங்கு…. அரசு கடும் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் கிடையாது. அத்தியாவசியப் பொருட்களுக்கான சேவைகள் மட்டும் தொடரும். மேலும் இன்று மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட கொரோணா பரிசோதனை முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 3லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

Categories

Tech |