Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்குதானே சொன்னோம் ” மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவியான முத்து ரஞ்சினி இணையவழி மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்து ரஞ்சினி சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த முத்து ரஞ்சினி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர் முத்து ரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்து ரஞ்சினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |