Categories
உலக செய்திகள்

வாக்களிக்க தயாரான தருணம்… நாடாளுமன்றத்துக்குள் புகுந்த எலி… எம்.பி.க்கள் அலறல்..!!

ஸ்பெயின் நாட்டில் எலி ஒன்று அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஸ்பெயின் நாட்டில் நடந்த அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் சுசானா டயஸை எம்.பி.க்கள் செனட்டராக நியமிக்க கோரும் பிரச்சனையில் வாக்களிப்பதற்காக தயாராக இருந்த வேளையில் எம்.பிக்கள் காலில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஏறி ஓடி கொண்டிருந்தது. இந்த எலியால் பெண் எம்.பி.கள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தால் தற்காலிகமாக நாடாளுமன்றக் கூட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு வழியாக எலி அங்கிருந்து வெளியேறியதோடு நாடாளுமன்ற கூட்டமும் மீண்டும் தொடங்கியது. அதில் சுசானா டயஸை பெர்னாண்டோ லோபஸ் கிலுக்கு பதிலாக அந்தலுசியன் தன்னியக்க சமூகத்தின் செனட்டராக எம்.பி.கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் எலி புகுந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |