சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமி பயந்து அழுது அங்கிருந்து ஓடினார்.
அதன்பின் சிறுமியை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரது தாயாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் இதுகுறித்து சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவராஜை கைது செய்துள்ளனர்.