தண்ணீரின் வழியாக இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்வதால் பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூடை பகுதியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை காவிரி ஆற்றை கடந்து சென்று சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் மயானம் எடுத்து செல்லும் பாதையில் ஆற்றின் குறுக்கே சுமார் 10 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில் கல்லுடை பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது சடலத்தை அந்தப் பகுதி மக்கள் உத்திர காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் நீந்திச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சிவகுமார் கூறியபோது இந்தப் பகுதியில் இறந்தவரின் உடலை உத்திர காவிரி ஆற்றில் நடந்து சென்று அடக்கம் செய்யப்பட்டது. எனவே கடந்த காலத்தில் சுமார் 3 1/2 உயரம் தடுப்பணை கட்டி இருந்ததால் சடலத்தை தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு சிரமமில்லை. ஆனால் தற்போது 10 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் அதிலிருந்து ஓடும் வெள்ளம் தடுப்பணையில் தேங்கி நிற்கின்றது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாதா நிலை ஏற்படுகின்றது. எனவே இந்தப் பகுதியில் சிறு பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்ன கவுன்சிலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.