பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லான்செட்டிபட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து காவல்துறையினர் 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.