தொடர் மழையின் காரணமாக மலைப்பகுதியில் வண்ண காளான்கள் முளைத்து அழகாக காட்சி அளிக்கின்றது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் முளைத்து அழகாக காட்சியளிக்கின்றது.
இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறியபோது, தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காளான்கள் முளைத்து இருக்கின்றது. ஆனால் இந்த காளான்களை உணவுக்கு பயன்படுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மழை பெய்தால் மட்டுமே இந்த கலர் காளான்கள் வளரும் என்றும் வறட்சியான நேரத்தில் வளராது என்றும் மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.