நகராட்சி ஆணையாளரை மாலை வேளையில் பணி இடை நீக்கம் செய்வதற்கு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக புவனேஸ்வரர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரர் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசு காலையில் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு கொரோனா தடுப்பு பணியில் நடைபெற்று வருகின்ற பணிகளின் விவரங்கள் குறித்து சில ஆவணங்களை கலெக்டர் கேட்டுள்ளார்.
மேலும் சில கோப்புகளிலும் முழுவதுமாக தகவலை பதிவு செய்யாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் ஆணையாளரை விசாரணைக்கு அழைத்த போது அங்கு அவர் இல்லை என்பது குறித்து உரிய விளக்கம் யாரும் அளிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனால் நகராட்சி ஆணையாளரான புவனேஸ்வரனை கலெக்டர் குஷ்வாஹா பணி இடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டுள்ளார். இவ்வாறு காலையில் புவனேஸ்வரர் தமிழக அரசால் பணியிட மாறுதல் உத்தரவு வந்தநிலையில் மாலை வேளையில் மாவட்ட கலெக்டர் அவரை பணி இடை நீக்கம் செய்துள்ளார்.