நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு முற்றிலும் அவசியமற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.