தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முதலூர் கல்லறை தோட்டப் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜஸ்டின் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர் பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மதுவை விற்ற குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.