தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி மீன்வளத் துறை ஆணையராக கே.எஸ் பழனிச்சாமி, பொருளியல் புள்ளியியல் துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர் துறை ஆணையராக அதுல் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.