Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வழங்கப்பட்ட ஆணை” ஆசிரியரின் நல்ல திறமை…. குவியும் பாராட்டுக்கள்….!!

மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் புதிய மாவட்ட கல்வி பயிற்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் தோமையார் உயர்நிலைப்பள்ளியில் சங்கீதா சின்னராணி என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணையை வாங்கிய சங்கீதா சின்னராணி தூத்துக்குடி மாவட்ட பயிற்சி கல்வி அலுவலராக உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் சங்கீதா சின்னராணிக்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |