வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் வசிக்கும் ரவீனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் சதீஷ் தனது மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் அங்கு வசிப்பதற்கு ரவீனாவிற்கு பிடிக்காததால் தனது கணவரான சதீஷை அழைத்துக்கொண்டு வீராணத்திற்கு சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சதீஷூம், ரவீனாவும் இணைந்து தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்ப வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ரவீனா காலையில் எழுந்து தனது கணவரை பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சதீஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.