Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மிகவும் பழமை வாய்ந்த மரம்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. நடைபெறும் தீவிர பணி….!!

பலத்த சூறைக்காற்றில் புங்கை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம்-பாபநாசம் மெயின் ரோட்டில் மருதநகர் பகுதியில் நின்ற பழமைவாய்ந்த புங்கை மரமானது சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்துள்ளது. இதில் மின் கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுந்ததால் அவைகளும் அறுந்து விழுந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களும் அறுந்து கிடந்த மின்கம்பியை பழுது பார்த்துள்ளனர்.

Categories

Tech |