நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் தினமும் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று 10,000 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக sabarimalaionline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.