Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் குழந்தையா….? மூதாட்டி அளித்த வாக்குமூலம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற மூதாட்டியை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்ததை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது மூதாட்டி ஒருவர் பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த மூதாட்டி ஆத்தூர் பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் மூதாட்டியின் உறவினரான ஒரு பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளதாகவும் அதை அடக்கம் செய்வதற்காக வாங்கி வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதாகவும் அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் மூதாட்டியின் வாக்குமூலத்தில் திருப்தியில்லாததால் காவல்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |