Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை…. 4 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுப்பையாவை நியமித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பி. முத்துகுமார் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், உயர் நீதிமன்றம் சார்பில் தேர்வுக் குழுவுக்கு மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் நியமிக்கப்படுகிறார்.

அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு குழுவை ஒரு வாரத்தில் தமிழக அரசு நியமிக்க வேண்டும். இந்த தேர்வு குழு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டு 4 மாதத்திற்குள் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Categories

Tech |