நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 69 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,350 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,0185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதுவரை 830 பேர் தொடர்ந்து கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.