15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கர்ப்பமாக்கிய முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.