நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.23 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பெட்ரோல் மற்றும் டீசல் வரியையும், அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும். இந்தியா முழுவதும் பாஜகவின் தவறான ஆட்சியால் பெட்ரோல் விலை மலை போல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.